சென்னை -பெங்களூரு இரண்டடுக்கு ரயிலில் 2ம் வகுப்பு பெட்டிகள்
சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்படும் இரண்டடுக்கு ரயிலில், விரைடிவில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படவிருக்கின்றன.
சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்படும் இரண்டடுக்கு ரயிலில், விரைவில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படவிருக்கின்றன.
சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்படும் இந்த இரண்டடுக்கு ரயிலில், ஐந்து பெட்டிகள் இணைக்கப்படவிருப்பதாகவும், இதற்கு கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க.. பேச்சுவார்த்தை தோல்வி: நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Advertisement
Advertisement
சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு ரயிலில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்படவிருக்கின்றன.
இதனுடன், ஏசி வசதி கொண்ட இரண்டடுக்கு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை பதில் இருந்து எட்டாகக் குறைக்கப்படுகின்றன. அதிவிரைவு ரயிலான இது, சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு இந்த ரயில் 5.45 மணி நேரத்தில் சென்றடையும். இதே வழித்தடத்தில் இரண்டாம் வகுப்பு விரைவு ரயில்கள் இதே வழித்தடத்தில் 6.10 மணி நேரத்தில் சென்றடையும்.
இதேபோல, கோவை - பெங்களூரு இடையே இயக்கப்படும் உதய் ரயிலிலும், ஏழு ஏசி இரண்டடுக்கு ரயில் இருக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் எட்டாக உயர்த்தப்பட்டு, ஐந்து இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்படவிருக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.