தமிழ்நாடு

சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக் கொடி!

சேலத்துக்கு வருகை தந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

DIN

சேலம்: சேலத்துக்கு வருகை தந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்துக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அப்போது பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள பல்கலைக்கழக துணை வேந்தரை ஆளுநர் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர், பல்வேறு கட்சியினர் கருப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய இந்திய மாணவர் சங்கத்தினர், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு சாலை வழியாக சேலத்திலிருந்து கோவைக்கு ஆளுநர் செல்லவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT