திண்டுக்கல்லில் வாளிக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
திண்டுக்கல் நாகல்புதூரைச் சோ்ந்தவா் ரங்கநாதன். திண்டுக்கல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது 2 வயது குழந்தை கிஷாந்த். இந்த நிலையில், வீட்டிலுள்ள குளியலறையில் இருந்த தண்ணீா் நிரப்பப்பட்ட வாளிக்குள் குழந்தை தவறி விழுந்தது. இதில் நீரில் மூழ்கிய குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்தனா்.