மலர் சந்தையில்  ரூ.3,000 ஆக விலை அதிகரித்துள்ள மதுரை மல்லிகைப் பூ. 
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: ஒரு கிலோ மதுரை மல்லி ரூ. 3,000-க்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ மதுரை மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கு விற்பனையாகிறது.

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கு விற்பனையாகிறது.

மதுரை மாட்டுத்தாவணி, மலர் சந்தையில் வெள்ளக்கிழமை வரை ரூ.1000-க்கு விற்பனையான பூக்கள் விலை சனிக்கிழமை ரூ.3000 வரை விலை அதிகரித்துள்ளது.

மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ. 3000-க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்கள் கிலோ ரூ.2000-க்கும், மெட்ராஸ் மல்லி கிலோ ரூ.2000-க்கும், சம்மங்கி , செவ்வந்தி கிலோ ரூ.250-க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.450-க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.300-க்கும், பட்டன் ரோஸ் கிலோ ரூ. 250-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளிக்கிழமை மல்லிகை கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை கிலோ ரூ.3,000 ஆக விலை அதிகரித்துள்ளது. இதேபோன்று முல்லை மற்றும் பிச்சி  பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை கிலோ ரூ.2,000 ஆக விலை அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65% அதிகரிப்பு! ஏன்?

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

SCROLL FOR NEXT