முகப்பு
தமிழ்நாடு

ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது: முதல்வர் ஸ்டாலின்

தமிழக அரசு சார்பில் குடியரசு நாள் விழாவில்  ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:19 PM
பகிர்:

தமிழக அரசு சார்பில் குடியரசு நாள் விழாவில்  ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம்.

ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →