முகப்பு
தமிழ்நாடு

கடும் புகை மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி!

போகிப் பண்டிகையையொட்டி, சென்னையில் பனியுடன் கூடிய புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

Updated On : 14 ஜனவரி, 2024 at 8:27 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 8:49 PM

போகிப் பண்டிகையையொட்டி, சென்னையில் பனியுடன் கூடிய புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

புகை மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் மெதுவாக இயக்கினர். புகை மூட்டத்தால் வாகனங்கள் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊா்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினா்.

புகை மூட்டத்தால் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 16 உள்நாட்டு விமானங்கள், 8 பன்னாட்டு விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அனைத்துப் பகுதிகளிலும்  கடும் குளிரில் மக்கள், அதிகாலை முதல் வீட்டில் உள்ள பழைய பொருள்களை எடுத்து வந்து வீட்டின் வாசல் முன்பு தீயிட்டு எரித்தார்கள். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வகையில் போகிப் பண்டிகை  கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.