தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் மங்கலாக தெரிந்த பெரியகோயில். 
தமிழ்நாடு

தஞ்சாவூரில் கடும் பனிப்பொழிவு 

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

தஞ்சாவூரில் கடந்த வாரம் பலத்த மழை பெய்த நிலையில் சில நாள்களாக பகலில் மிதமான வெப்பமும், இரவில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. ஆனால் காலை 6 மணிக்கு பிறகு பனிப்பொழிவு குறைந்துவிடும்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக காலை 7 மணி கடந்தும் புகை மண்டலம் போல பனி படர்ந்து கிடந்தது.

இதனால், மாநகர மக்கள் சுமார் 50 மீட்டருக்கு அப்பால் எதுவும் தெரியாததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் கடும் குளிர் நிலவியதால் காலை நேரத்தில் வேலை செய்த பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மாநகரில் 10 மணியை கடந்தும் பனியின் தாக்கம் தொடர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா! பிரதமர் மோடி பங்கேற்பு!

கரூர் கொடுந்துயரத்தில் அரசியல் விளையாட்டை தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்

பாரிஸில் வசந்தம்... சானியா ஐயப்பன்!

சைபர் குற்றங்களில் முதலிடம் தனிநபர் தகவல் திருட்டு!

SCROLL FOR NEXT