மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஜன.23ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவசர நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.