முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 20 ஜனவரி 2024, 8:50 pm IST
பகிர்:

தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். 
இதன்படி தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலராக எஸ்.சுப்பிரமணியனும், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலராக ஜெயஸ்ரீ முரளிதரனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக எஸ்.நாகராஜனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
மேலும் நில நிர்வாகத்துறை ஆணையராக கே.எஸ்.பழனிசாமியும், மீன்வளத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையராக ஜடக் சிருவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.