தமிழ்நாடு

ஜிப்மரில் அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் நாளை வழங்கப்படும்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைகள் வழக்கம் போல நாளை வழங்கப்படும் என்று ஜிப்மர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 

DIN

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைகள் வழக்கம் போல நாளை வழங்கப்படும் என்று ஜிப்மர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை நாளை(திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இந்த கோலாகல நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்க உள்ளனா்.

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி, ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிப்மரில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரிசோதனைகளை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நாளை திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஏதும் இல்லை எனவும் இருப்பினும் அவசர சிகிச்சைகள் வழக்கம் போல நாளை வழங்கப்படும் எனவும் ஜிப்மர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஜிப்மர் விளக்கத்தை ஏற்று மருத்துவமனையை மூட தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT