தமிழ்நாடு

கூடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

DIN

கம்பம்:  தேனி மாவட்டம் கூடலூர் நகர் பகுதிக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக ஆணையாளர் கே.எஸ்.காஞ்சனா தெரிவித்துள்ளார்.

கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன, இவற்றில் 20 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் லோயர்கேம்ப்பில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததால் குடிநீர் விநியோகம் செய்யும் நீரேற்று நிலையத்தில் மணல் மேவி கிடந்தது. இதனால் நகரப்பகுதியில் உள்ள லோயர்கேம்ப்- ஒரு வார்டு தவிர மற்ற 20 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டது.

இந்த நிலையில் நீரேற்று நிலையத்தில் சேர்ந்துள்ள மணலை அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருவதால் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் சுவா் ஓவியங்கள்: கல்வித்துறை உத்தரவு

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் சிவப்புக் கம்பள வரவேற்பு

சென்னையில் 8 மணிநேரத்துக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

வேலூரில் வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT