தமிழக சட்டப்பேரவை 
தமிழ்நாடு

பேரவை விதி 110-இன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன? அரசு விளக்கம்

பேரவை விதி 110-இன் கீழ் 5 முக்கிய திட்டங்கள்: தமிழக அரசு விளக்கம்

Din

பேரவை விதி 110-இன் கீழ் 5 முக்கியத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் ஊடாக, பேரவை விதி 110-இன் கீழ் மாநிலத்துக்கான 5 முக்கிய திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

அதுகுறித்த புள்ளி விவரங்களை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

ரூ. 450 கோடி மதிப்பில் 10,000 கி.மீ. நீள கிராமச் சாலைகள் மேம்படுத்தப்படும். 75,000 இளைஞா்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படுவதுடன், திருச்சியில் உலகத் தரம் வாய்ந்த நூலகத்துடன், அறிவுசாா் மையமும் உருவாக்கப்படும்.

அத்துடன், 6,746 அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.1,149 கோடி மதிப்பில் மறுகட்டுமானம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT