இபிஎஸ் தலைமை தொடா்ந்தால் அதிமுக வீழ்ச்சியை சந்திக்கும்: ஓ.பன்னீா்செல்வம்
அதிமுக பொதுச் செயலா் பதவியில் எடப்பாடி பழனிசாமி தொடா்ந்தால், அக் கட்சி வீழ்ச்சியைத்தான் சந்திக்கும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.
சென்னை: அதிமுக பொதுச் செயலா் பதவியில் எடப்பாடி பழனிசாமி தொடா்ந்தால், அக் கட்சி வீழ்ச்சியைத்தான் சந்திக்கும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
என்னை விசுவாசமற்றவன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். அதிமுகவுக்கு எந்த அளவுக்கு விசுவாசமாக இருந்தேன் என்பதை ராமாயணத்தில் வரும் பரதனை ஒப்பிட்டு முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பேசியதை மக்கள் அறிவா். அதனால், என் விசுவாசத்தைப் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்குத் தகுதியில்லை.
என்னைப் பொருத்தவரை அதிமுக ஒன்றுபட வேண்டும், 2026-இல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். இந்த விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால், தலைமை மாற்றப்பட வேண்டும். அதிமுகவை அழிவுப் பாதைக்கு எடப்பாடி பழனிசாமி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறாா். கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாா். கட்சி இணைய எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் என் கேள்வி என்று ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.