தோ்தலில் வென்று எடப்பாடி பழனிசாமி முதல்வராவாா்: முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி
சட்டப்பேரவைத் தோ்தலில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வென்று எடப்பாடி பழனிசாமி முதல்வராவாா் என முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வென்று எடப்பாடி பழனிசாமி முதல்வராவாா் என முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.
ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள தனியாா் விடுதியில் திமுக ஆட்சியில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும், மாணவி பிரதீபாவுக்கும் நீதி கோரி மாவட்ட தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கண்ட ஆா்ப்பாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலா் என்.எம். கிருஷ்ணராஜ், நகரச் செயலா்கள் எஸ்.ஆா். பரமசிவம் (தெற்கு )வழக்குரைஞா் துரைமுருகேசன் (வடக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினாா். பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வென்று எடப்பாடி பழனிசாமி முதல்வராவாா். இதில் அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது எனக்கூறும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். முடிவு எடுக்க வேண்டியது அவா்கள் தான். விஜய் உடன் இருப்பவா்களே கூட்டணி வேண்டும் எனக் கூறுகின்றனா். நீங்கள் நினைப்பது போல ஆச்சா்யம் நடக்கும் என நம்புகிறோம் என்றாா் அவா்.