மதுரை: நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் சேவை ஞாயிறுக்கிழமை (ஜூலை 14) ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.35 மணிக்கு நாகர்கோவிலிருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06012), திங்கள்கிழமை காலை 7.45 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06011) ஆகியன நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.