கோப்புப் படம். 
தமிழ்நாடு

வெள்ளப்பெருக்கு- குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

மேற்கு தொடர்ச்சி மலை மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

DIN

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலத்தில் கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் என சீசன் களைகட்டியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

குற்றாலம் பேரருவியின் மையப் பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனா். ஐந்தருவியிலும் கூட்ட நெரிசலின்றி சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழும் வகையில் காவல்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்

ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!

ஹாப்பி ராஜ் புரோமோ!

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

SCROLL FOR NEXT