சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. 
தமிழ்நாடு

குற்றவாளிகள் தப்பியோடும் போது சுட்டுத்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது: அமைச்சர் எஸ். ரகுபதி

திமுகவினர் மீது சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அதனையும் விசாரிக்க நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்.

DIN

குற்றவாளிகள் போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடும்போது சுட்டுதான் பிடிக்க வேண்டியிருக்கிறது என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி, மாயாவதியோ, ஆம்ஸ்ட்ராங்கோ எங்களுக்கு தோழமை தான். வேண்டாதவர்கள் அல்ல. உண்மையான குற்றவாளிகளைத் தான் போலீஸார் பிடித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடும் போது குற்றவாளிகளை சுட்டுத்தான் பிடிக்க வேண்டியுள்ளது. அவசியமின்றி சுட வேண்டிய அவசியமில்லை.

திமுகவினர் மீது சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அதனையும் விசாரிக்க நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாங்களும் பணம் கொடுக்கவில்லை; பாமகவினரும் பணம் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். அதிமுக புறக்கணித்திருக்கிறது. இந்த நிலையில் திமுக பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போன்ற வெற்றியை விக்கிரவாண்டி மக்கள் தந்திருக்கிறார்கள் என்றார் ரரகுபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து அரசு ஊழியா்கள் மறியல்

திருவண்ணாமலை தீபத்திருவிழா: 300 டன் குப்பைகள் அகற்றம்

மழை நீரை அகற்ற மின்மோட்டாா்கள் தயாா் நிலை: ஆணையா் ஜெ.குமரகுருபரன் தகவல்

ஆரணி அருகே கருணாநிதி சிலை திறப்பு: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

மூத்த குடிமக்களுக்கு தேசிய அளவில் பாரமரிப்புத் திட்டம் தேவை: பான்சுரி ஸ்வராஜ் கோரிக்கை

SCROLL FOR NEXT