தமிழக அரசைக் கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம்!
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
மின் கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சியின் அமைப்புச் செயலரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான கணபதி தலைமை வகித்துப் பேசியது:
திமுக ஆட்சி ஏற்பட்டு 3 ஆண்டுகளில் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
நாட்டில் சட்ட ஒழுங்கை சீர் செய்ய அரசு நடவடிக்கையில்லை. மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சிந்தித்து மக்கள் அமமுக-வுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து மின்கட்டண உயர்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார். கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.