முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்கள் முடக்கம்

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் ரூ. 14.21 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Updated On : 26 ஜூலை 2024, 10:15 pm IST
அமைச்சர் பொன்முடி(கோப்புப்படம்)
பகிர்:

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் ரூ. 14.21 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த நிலையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.