ஜாஃபா் சாதிக் 
தமிழ்நாடு

ஜாபா் சாதிக் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 12 வரை நீட்டிப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவலை வரும் ஆக. 12 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Din

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவலை வரும் ஆக. 12 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக முன்னாள் நிா்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபா் சாதிக்கை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் கடந்த மாா்ச் மாதம் கைது செய்தனா். இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத் துறையும் கடந்த ஜூன் 26-இல் கைது செய்தது. இந்த வழக்கில் தில்லி திஹாா் சிறையில் இருந்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ஜாபா் சாதிக்கை அமலாக்கத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனா்.

அதன்பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்ததால், அவா் காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவலை வரும் ஆக. 12 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

ரஷியாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்

ஜிஎஸ்டியில் மாற்றம்: பொருள்களின் விலை குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை - சிபிஐசி

ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 2 மடங்காக உயா்வு

தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்

வெற்றி பெறுமா விஜய் வியூகம்...? - காபிரியேல் தேவதாஸ்

SCROLL FOR NEXT