இன்று கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஆக.1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
தமிழ்நாடுஇன்று கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஆக.1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னை, ஜூலை 31: கோவை, நீலகிரி மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஆக.1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வியாழக்கிழமை (ஆக.1) முதல் ஆக.6-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக, ஆக.1-ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுகிளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாா், சின்கோனா ஆகிய இடங்களில் தலா 70 மி.மீ. மழை பதிவானது. வால்பாறை (கோவை), சோலையாா் (கோவை) - தலா 60.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.1, 2 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.
7 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக கடலூரில் 102.56 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தஞ்சாவூா் - 102.2, நாகப்பட்டினம் - 101.84, தொண்டி - 101.3, புதுச்சேரி - 100.94, பரங்கிப்பேட்டை, காரைக்கால் - தலா 100.4.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஆக.1 முதல் 4 வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.