தமிழ்நாடு

பாபநாசம் அருகே ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

குழி தோண்டும்போது பண்டைய கால ஐம்பொன் சிலைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

DIN

பாபநாசம் அருகே பொன்னாலான ஐம்பொன் சிலைகள் மற்றும் சோடசவ் உபசாரம் போன்ற 10 பொருள்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை கோயில் தேவராயன்பேட்டை சிவன்கோயில் அருகே ஆபிஸர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது பைசல் (43).

இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோன்றினார். இரண்டு குழிகள் தோண்டப்பட்ட நிலையில், மூன்றாவது குழி தோண்டும்போது பண்டைய கால ஐம்பொன் சிலைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக முகமது பைசல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் அங்கு நிலத்தில் புதைந்திருந்த சோமஸ்கந்தர், சந்திரசேகரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சிலைகளையும், தூபக்கால் போன்ற பொருள்களான தட்டு, பீடம் உள்ளிட்ட பூஜைக்குத் தேவையான பல்வேறு பொருட்களைக் கண்டெடுத்தனர். மேலும் பள்ளங்களைத் தோண்டி சிலைகள் இருக்கிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

பலி கேட்கிறதா, பருவநிலை மாற்றம்? ஆபத்தில் ஆசிய நாடுகள்! ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

ஷாருக் கான் கஜோலுக்கு லண்டனில் சிலை! | Dilwale Dulhania Le Jayenge

நாட்டில் 400க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்து!

SCROLL FOR NEXT