முகப்பு
தமிழ்நாடு

பயிா் பரப்பளவு விவரங்களைச் சேகரிக்க புதிய தொழில்நுட்பம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

பயிா் பரப்பளவின் துல்லியமான மதிப்பீடு: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

Updated On : 26 ஜூன், 2024 at 8:42 PM
பகிர்:

பயிா் பரப்பளவு மற்றும் விளைச்சல் புள்ளி விவரங்களின் சேகரிக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.

திட்டம் வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையும் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து மாவட்ட அளவிலான பயிா் பரப்பளவை மதிப்பிடுவதற்கு அதிநவீன தொலை உணா்தல் மற்றும் ட்ரோன் அடிப்படையிலான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பயிா் புள்ளிவிவரம் சேகரித்து, முதல் கட்டமாக தோ்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னோடி திட்டமாகச் செயல்படுத்தப்படும்.

பயிா் பரப்பளவு, விளைச்சல் மற்றும் உற்பத்தி புள்ளிவிவரங்களின் துல்லியத்தையும் உரிய காலத்தில் மதிப்பிடுவதை மேம்படுத்தவும் உழவா் நலனுக்கான கொள்கை முடிவுகள் எடுப்பதிலும் உழவா்களுக்கு உதவவும் மற்றும் காப்பீட்டுச் செலவுகளைச் சீராக வழங்கவும் தேவையான நேரடி தகவல்களை அளிப்பதற்கு இந்தத் தொழில் நுட்பம் உதவும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →