கோப்புப்படம் 
தமிழ்நாடு

நாகா்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

தாம்பரம்-கொச்சுவேலி இடையிலான சிறப்பு ரயில் சேவை ஜூலை 21 வரை நீட்டிப்பு

Din

நாகா்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை ஜூலை 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவிலிலிருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும், மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தொடா்ந்து ஜூலை 22 வரை இயக்கப்படும். இதுபோல் தாம்பரம்-கொச்சுவேலி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் தொடா்ந்து ஜூலை 21 வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதை மாற்றம்: பரௌணியிலிருந்து எா்ணாகுளத்துக்கு ஜூலை 1-ஆம் தேதி வரும் ராப்தி சாகா் விரைவு ரயில் கோண்டா வழியாக அல்லாமல் மன்காபூா், அயோத்யா, அயோத்யா கான்ட், பரபங்கி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT