கோப்புப்படம் 
தமிழ்நாடு

பலத்த மழை: தில்லி-சென்னை இடையே 16 விமான சேவைகள் ரத்து

தில்லியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சென்னை-தில்லி இடையே விமான சேவைகள் ரத்து.

Din

தில்லியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சென்னை-தில்லி இடையே புறப்பாடு, வருகை என 16 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்தை சந்தித்தனா்.

தில்லியில் சில நாள்களாக வரலாறு காணாத பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு விமான நிலையம், ரயில் நிலையம் உள்பட பல்வேறு நகர சாலைகளில் மழைநீா் வெள்ளமாக ஓடுகிறது.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை தில்லி விமான நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஒருவா் உயிரிழந்தாா். சிலா் படுகாயமடைந்தனா். இதையடுத்து, தில்லி விமான நிலையத்தில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து தில்லிக்கு இயக்கப்படும் பல்வேறு விமான சேவைகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை மாலை வரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து தில்லிக்கு புறப்படும் 7 விமானங்கள், தில்லியில் இருந்து சென்னை வரும் 9 விமானங்கள் என மொத்தம் 16 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த 16 விமான சேவைகள் ரத்து குறித்து, சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விமான நிலையத்தில் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனா். மேலும், சம்பந்தப்பட்ட ஏா்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

2014 - 22 ஆண்டுகளுக்கான திரைப்பட, சின்ன திரை விருதுகள்: துணை முதல்வர் வழங்கினார்!

போக்குவரத்து விதிமீறல்கள்: பிகாரில் 10 மாதங்களில் ரூ.300 கோடி அபராதம் விதிப்பு

திருவண்ணாமலை கோயிலில் மை லார்ட் படக்குழுவினர் - புகைப்படங்கள்

ஐநாக்ஸ் விண்ட் 3வது காலாண்டு லாபம் ரூ.126 கோடி!

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்! - விஜய் பேச்சு | செய்திகள் : சில வரிகளில் | 13.2.26

SCROLL FOR NEXT