கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் 
தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்பு: ஜூலை 3 முதல் விண்ணப்ப திருத்தம்

திருத்தங்கள் இருந்தால் அவற்றை வரும் 3-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Din

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை சமா்ப்பித்தவா்கள், அதில் திருத்தங்கள் இருந்தால் அவற்றை வரும் 3-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இளநிலைப் படிப்புகளுக்கான (பிவிஎஸ்சி, ஏஎச், பிடெக்) மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு, இணைய வழியே கடந்த ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெற்றது.

வெளிநாடு வாழ் இந்தியா்கள் உள்ளிட்டோா் ஜூலை 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நிகழாண்டில் கால்நடை மருத்துவப் படிப்புக்கு 14,497, பிடெக் படிப்புக்கு 3,000 என 17,497 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களில் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதனை திருத்தவும், விடுபட்ட சான்றிதழை இணைக்கவும் வரும் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

3 பதக்கங்களையும் கைப்பற்றி இந்திய ஜூனியா் மகளிா் அபாரம்

20 நாள்களில் மணமகன் உயிரிழந்த சம்பவம்: உறவினா்கள் மறியல்

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும்: முதல்வா் சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுப்பு

நாளை திமுக செயற்குழு கூட்டம்

SCROLL FOR NEXT