முகப்பு
தமிழ்நாடு

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்வு

சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,960.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 மார்ச், 2024 at 4:05 AM
வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.23.50 உயர்வு
பகிர்:

சென்னை: இந்தியாவில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,960.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமை மீண்டும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை ரூ.23.50 உயா்ந்து, ரூ.1,960.50-க்கு விற்பனையாகிறது.

இதனால் உணவு விடுதி, அடுமனை, தேநீா் கடை உள்ளிட்ட தொழில் சாா்ந்தவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனினும், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.918-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →