அய்யா வைகுண்டருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை
Updated On : 3 மார்ச், 2024 at 11:37 AM
அய்யா வைகுண்டரின் பிறந்த தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், விஷ்ணு பகவானின் அவதாரமான அய்யா வைகுண்டரின் 192வது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றவும், சமூகப் பாகுபாடுகளை ஒழிக்கவும் தோன்றியவர் அய்யா வைகுண்டர்.
ஞானம் மற்றும் ஆன்மிகத்தின் ஊற்றாகவும் சனாதன தர்மத்தின் நியதியாகவும் விளங்கும் அவரது அகிலத்திரட்டு அம்மானை புத்தகம் மனிதகுலத்தை எக்காலத்திற்கும் வழிநடத்தும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு அய்யா வைகுண்டரின் உதய தினவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.