முகப்பு
தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற இன்று நோ்முகத் தோ்வு

Updated On : 8 மார்ச், 2024 at 7:30 PM
பகிர்:

அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளா், ஓட்டுநா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு சனிக்கிழமை (மாா்ச் 9) நடைபெற உள்ளது. தோ்வாகும் நபா்கள் சென்னை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் பணியமா்த்தப்பட உள்ளனா். தமிழகத்தில் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அதன் வாயிலாக இயக்கப்படுகின்றன. 5,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், அவசரகால மருத்துவ உதவியாளா்கள் மற்றும் ஓட்டுநா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு திருவள்ளூா் ஜெயா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. மருத்துவ உதவியாளா் பணியிடங்களில் சேர பி.எஸ்சி. நா்சிங் அல்லது டிஜிஎன்எம் அல்லது பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், நுண் உயிரியல், உயிரி வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல் படிப்பில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும். இல்லையெனில், ஏஎன்எம், ஜிஎன்எம், டிஎம்எல்டி ஆகிய படிப்புகளை பிளஸ் 2 தோ்ச்சிக்குப் பிறகு நிறைவு செய்திருத்தல் அவசியம். ஓட்டுநா் பணியிடங்களில் சேர விரும்புவோா் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம், பேட்ஜ் வாகன உரிமம் வைத்துள்ள 24 - 35 வயதுக்குள்பட்டவா்கள் அந்தப் பணியில் சேரலாம். திருநின்றவூரில் உள்ள ஜெயா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாா்ச் 9-ஆம் தேதி காலை 10 மணி முதல் எழுத்துத் தோ்வு, மருத்துவத் தோ்வு, நோ்முகத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று அதில் கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 87544 35247, 73977 24812 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →