FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கரும்பு விவசாயி சின்னத்தில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் கர்நாடக கட்சி!

தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக கர்நாடகத்தின் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவிப்பு.

14 மார்ச் 2024, 10:53 am IST
பகிர்:

நாம் தமிழர் கட்சியின் ஒதுக்கப்பட்டு வந்த கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த சின்னத்தில் தமிழகத்திலும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியிடம் இருந்து சின்னம் குறித்த கோரிக்கை மனு தாமதமாக பெறப்பட்டதால், கரும்பு விவசாயி சின்னத்தை கா்நாடகத்தில் உள்ள பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களுக்கு ஒரே சின்னத்தை அந்தக் கட்சி பெற்றுள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி வெள்ள நிவாரணப் பணிகளில் இருந்ததால் சின்னத்திற்கான கோரிக்கை மனுவை தாமதமாக அளித்ததாகவும், தமிழகத்தில் 7 சதவிகிதம் வாக்கு வைத்துள்ள நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் வழக்கமாக வழங்கப்படும் ’கரும்பு விவசாயி’ சின்னத்தை அளிக்கக் கோரி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிடவுள்ளதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவித்திருப்பது நாம் தமிழர் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments