கமல்ஹாசன் (கோப்புப்படம்)
கமல்ஹாசன் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முயற்சிக்கலாமா? - கமல்ஹாசன்

DIN

ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்க முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு, தேர்தல் ஆணையம், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொது மக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து 18 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தயாரித்து குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்தது.

அதாவது, மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை முதல் சுற்றிலும், அதைத் தொடர்ந்து 100 நாள்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை இரண்டாவது சுற்றிலும் நடத்தலாம் என்று கோவிந்த் குழு பரிந்துரைத்தது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அவரது எக்ஸ் பக்கத்தில், "ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முயற்சிப்பதற்கு முன்பு, குறைந்தபட்சம் ஒரே கட்டம் ஒரே தேர்தல் என்பதை முயற்சிக்கலாமே?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்

கோவை வஉசி பூங்காவில் பராமரிக்கப்பட்ட புள்ளிமான்கள் வனப் பகுதியில் விடுவிப்பு

அரவக்குறிச்சி அருகே கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT