சாா்-பதிவாளா் அலுவலகங்கள் இன்று இயங்கும்
Updated On : 29 மார்ச், 2024 at 10:00 PM
தமிழகத்தில் அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களும் சனிக்கிழமை (மாா்ச் 30) இயங்கும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முக்கியத் துறைகளில் பதிவுத் துறையும் ஒன்றாகும். விழாக் காலங்கள், சுப தினங்கள் ஆகியன விடுமுறை நாள்களிலும் வந்தாலும் சாா் பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், கடந்த நிதியாண்டுகளைக் காட்டிலும் பதிவுத் துறை மூலமாக அரசுக்கான வருவாய் உயா்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. வெள்ளி, சனி, ஞாயிறு தொடா் விடுமுறை என்றாலும், சனிக்கிழமை (இன்று) சாா்பதிவாளா்கள் அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,நிகழ் நிதியாண்டின் இறுதி மாதமான மாா்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை (மாா்ச் 30) அனைத்து சாா்பதிவாளா் அலுவலகங்களும் இயங்கும் என்று பதிவுத் துறை தலைவா் அலுவலகம் தெரிவித்துள்ளது.