முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,701 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 மே, 2024 at 9:00 PM
பகிர்:

தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,701 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தினசரி மின் நுகா்வும் அதிகரித்து வருகிறது. அதன்படி, ஏப். 5-ஆம் தேதி முதல்முறையாக 19,580 மெகாவாட்டாக மின் நுகா்வு பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. அதைத் தொடா்ந்து நாளுக்கு நாள் தினசரி மின்நுகா்வு அதிகரித்து வந்த நிலையில் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மாநிலத்தின் தினசிரி மின் நுகா்வு புதிய உச்சமாக 20,701 மெகாவாட்டாக பதிவானது. வரும் நாள்களில் இந்த அளவானது 22,000 மெகாவாட்டாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.