தமிழ்நாடு

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.

DIN

தமிழகத்துக்கு முதல்முறையாக வெயிலுக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை விடுத்துள்ளது.

ஏற்கெனவே வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திருச்சி, கோவை, திருப்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக வட மாவட்டங்களில் சில பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT