கோப்புப்படம் 
தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டதில், திருச்சி மாவட்டத்தில் 95.74% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

DIN

திருச்சி: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டத்தில் ஆண்கள் 13, 371, பெண்கள் 16.244 என மொத்தம் 29, 615 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் 12,491 பேர் (93.42%), பெண்கள் 15,863 (97.65%) என மொத்தம் 28.354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.74 சதவிகித தேர்ச்சியாகும்.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று தேர்வு எழுதிய 4,775 மாணவர்களில் 4253 பேரும், மாணவியர் 5,589 பேரில் 5,329 பேரும் என மொத்தம் 10,364 பேருக்கு 9.582 பேர் (92.45 %) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில அளவில் 13 ஆவது இடம்:

திருச்சி மாவட்டம் தமிழக அளவில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் 13 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2021 - 22 கல்வியாண்டில் 95. 93% தேர்ச்சி பெற்று 12-ஆவது இடத்தையும், 2022 -23 கல்வியாண்டில் 96.02 % தேர்ச்சி பெற்று 13 ஆவது இடத்தையும் பெற்றிருந்தது. நிகழாண்டும் 95.74 % தேர்ச்சியை பெற்று அதே 13 ஆவது இடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

கடலோரம்... பவித்ரா லட்சுமி!

SCROLL FOR NEXT