நெல்லை - சென்னை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே
நெல்லை மற்றும் சென்னை இடையிலான சிறப்பு ரயில்(06070) இன்று(மே 9) ஒருநாள் மட்டும் நெல்லையில் இருந்து தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறையையொட்டி சென்னை எழும்பூர் மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நெல்லை மற்றும் சென்னை இடையிலான சிறப்பு ரயில்(06070) இன்று(மே 9) ஒருநாள் மட்டும் நெல்லையில் இருந்து தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு :
Advertisement
Advertisement
நெல்லை மற்றும் சென்னை இடையிலான சிறப்பு ரயில்(06070) திருநெல்வேலியில் இருந்து 2.45 மணி நேரம் தாமதமாக புறப்படும். வழக்கமாக இரவு 6.45-க்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் 2.45 மணி நேரம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு புறப்படும்.
ரயில் பெட்டிகளின் இணைப்பு பணி காரணமாக இந்த சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.