10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14% தேர்ச்சி!
புதுச்சேரி மற்றும் காரைக்காலின் மொத்த தேர்ச்சி சதவிகிதம் 89.14.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 14,952 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். அவர்களில் 13,328 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மொத்த தேர்ச்சி சதவிகிதம் 89.14, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிதம் 78.08 ஆகும்.
Advertisement
Advertisement
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் மொத்த தேர்ச்சி விகிதம் கடந்தாண்டைவிட இந்தாண்டு அதிகரித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 90 எனவும், காரைக்காலில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 17 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 9 லட்சம் மாணவ, மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.