ரயில் நிலையத்தில் நடனமாடி விடியோ: வழக்குப் பதிவு செய்தது ஏன்?
ரயில் நிலையத்தில் நடனமாடி விடியோ பதிவிட்ட பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடுரயில் நிலையத்தில் நடனமாடி விடியோ: வழக்குப் பதிவு செய்தது ஏன்?
ரயில் நிலையத்தில் நடனமாடி விடியோ பதிவிட்ட பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் நடனமாடி இன்ஸ்டாகிராமில் விடியோ பதிவிட்ட நான்கு பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் 3 இளம் பெண்கள் திரைப்பட பாடல் ஒன்றுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது மட்டுமின்றி தெருக்களிலும் நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ரயில் நிலையம் போன்ற இடங்களில் உரிய அனுமதி பெறாமல் இது போன்ற விடியோக்கள் எடுக்கக் கூடாது என்கிற விதி நடைமுறையில் உள்ள நிலையில் மூன்று இளம் பெண்கள் நடனமாடி அதை விடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருப்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் விடியோவில் நடனமாடிய மூன்று இளம் பெண்கள் மீதும் அந்த விடியோவை எடுத்த இளைஞர் மீதும் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் அநாகரிகமாக அல்லது தொல்லை தரும் வகையில் நடந்து கொள்ளுதல், அனுமதி இன்றி ரயில்வேக்கு சொந்தமான இடத்திற்கு செல்லுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களிடம் அபராதம் விதித்தனர். மேலும் இது போல் இனி செய்யக்கூடாது என அவர்களை எச்சரித்து அனுப்பினர்.