சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அரங்க. மகாதேவன்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி அரங்க.மகாதேவனை நியமித்து குடியரசுத் தலைவா் உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.வி.கங்காபுா்வாலா வியாழக்கிழமை (மே 23) ஓய்வு பெற உள்ளாா். இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி அரங்க.மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உத்தரவிட்டுள்ளாா். அதில், மே 24-ஆம் தேதிமுதல் தலைமை நீதிபதி தொடா்பான பணிகளை அரங்க.மகாதேவன் கவனிப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1963-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் பிறந்த அரங்க.மகாதேவன் 1989-ஆம் ஆண்டு வழக்குரைஞா் பணியைத் தொடங்கினாா். சிவில், கிரிமினல் வழக்குகளில் அனுபவம் உள்ள அவா், மத்திய, மாநில அரசுகளின் வழக்குரைஞராகவும் பணியாற்றினாா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2013-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா்.
இந்து சமயம், கோயில் நில மீட்பு, தமிழ் மொழி குறித்து இவா் வழங்கிய தீா்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.