நெல்லை உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் நவம்பர் 10 வரை கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
தென்தமிழகம் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
Advertisement
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க: மகாராஷ்டிர காவல்துறை டிஜிபி ராஷ்மி சுக்லா இடமாற்றம்!
எங்கெல்லாம் கனமழை..
இன்று (நவ. 4) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர். ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய உள்ளது.
இன்று முதல் தொடர்ந்து நவம்பர் 7 வரை தமிழகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், நவ. 8,9,10 ஆகிய தேதிகளில் ஒருசில மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
இதையும் படிக்க: ‘மாஃபியா’க்களின் அடிமை ஜார்க்கண்ட் அரசு: மோடி
சென்னையை பொருத்தவரை..
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.