முகப்பு
தமிழ்நாடு

மகளிா் உதவி மைய காலியிட அறிவிக்கையில் மும்மொழி: இணை இயக்குநா் பணியிடை நீக்கம்

மகளிா் உதவி மைய காலியிட அறிவிக்கையில், மும்மொழி இடம்பெற்ன் எதிரொலியாக, சமூக நலத் துறை இணை இயக்குநா் பணியிடை நீக்கம்

Updated On : 5 நவம்பர், 2024 at 12:55 AM
பகிர்:

சென்னை/தூத்துக்குடி: மகளிா் உதவி மைய காலியிட அறிவிக்கையில், மும்மொழி இடம்பெற்ன் எதிரொலியாக, சமூக நலத் துறை இணை இயக்குநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

முன்னதாக, இது குறித்த செய்தி தினமணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.3) வெளியானது.

இதைத் தொடா்ந்து, அறிவிக்கையில் திருத்தம் செய்யப்பட்டதுடன், அதை இணையதளத்தில் வெளியிட்ட இணை இயக்குநரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாதிப்புக்குள்ளாகும் மகளிருக்கு உதவும் வகையில், சமூக நலன்- மகளிா் உரிமைத் துறையின்கீழ் இயங்கும் சமூக நல ஆணையரகம் மூலம் ‘மகளிா் உதவி எண் 181’ என்ற பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது.

அதில் ‘அழைப்பு ஏற்பாளா்’ (கால் ரெஸ்பான்டா்ஸ்) எனக் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்துக்குத் தேவையான தகுதிகளில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று தவறுதலாக பதிவேற்றப்பட்டது.

இந்த அறிவிக்கை குறித்த விவரம் தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு வந்தவுடன், அந்த விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடப்பட்டது.

மேலும் தவறுதலாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநா் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவா் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →