முகப்பு
தமிழ்நாடு

பராமரிப்பு பணிகள் - வரும் 17ம் தேதி புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வரும் 17ஆம் தேதி மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

Updated On : 15 நவம்பர் 2024, 7:04 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வரும் 17ஆம் தேதி மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி வரும் 17ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், இந்த நேரத்தில் கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தயவுசெய்து செத்து விடு! கேள்வி கேட்ட மாணவரை சாகச் சொன்ன ஏஐ!

அதேசமயம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் அட்டவணைப்படி இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

எனவே பயணிகள் அதற்கேற்ப தங்களின் பயணத்தை திட்டமிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.