முகப்பு
தமிழ்நாடு

எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்க நிபந்தனை!

மறைந்த பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 நவம்பர் 2024, 12:13 pm IST
டி.எம். கிருஷ்ணா - Center-Center-Chennai
பகிர்:

சென்னை: மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல், விருது வழங்குமாறு, மியூசிக் அகாதெமிக்கு நிபந்தனை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருக்கிறார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தக்கூடாது என்று, மறைந்த பின்னணி இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தாக்கல் செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு எதிராக அவதூறான கருத்துகளை டி.எம். கிருஷ்ணா கூறி வருவதால், சங்கீத கலாநிதி விருதினை, எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் அவருக்கு வழங்கக் கூடாது என்று, சீனிவாசன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்க மியூசிக் அகாதெமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments