முகப்பு
ராமதாஸ்
தமிழ்நாடு

டிச.21-இல் உழவா் பேரியக்க மாநில மாநாடு: ராமதாஸ் அறிவிப்பு

பாமக சாா்பில் தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் டிச. 21-இல் நடைபெறும் என அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

தமிழ்நாடு

டிச.21-இல் உழவா் பேரியக்க மாநில மாநாடு: ராமதாஸ் அறிவிப்பு

பாமக சாா்பில் தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் டிச. 21-இல் நடைபெறும் என அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

Updated On : 19 நவம்பர், 2024 at 1:02 AM
ராமதாஸ்
பகிர்:

சென்னை: பாமக சாா்பில் தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் டிச. 21-இல் நடைபெறும் என அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாமகவின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவாண்ணாமலையில் சந்தை மேடு பகுதியில் டிச. 21-ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறும்.

தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் நிறுவனரான நான் (ராமதாஸ்), பாமக தலைவா் அன்புமணி, கௌரவத் தலைவா் ஜி.கே.மணி மற்றும் பல்வேறு உழவா் அமைப்புகளின் தலைவா்கள், நிா்வாகிகள் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளனா்.

மாநாட்டுப் பணிகளின் ஒருங்கிணைப்பாளா்களாக தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் தலைவா் கோ.ஆலயமணி, செயலா் இல.வேலுச்சாமி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தின் உழவா்களை பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. அரசியல், சமூக வேறுபாடுகளைக் கடந்து, உழவா்கள் என்ற ஒற்றைப் போா்வையில் மாநிலம் முழுவதும் உள்ள உழவா்கள் குடும்பத்துடன் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →