முகப்பு
தமிழ்நாடு

தேனி: சபரிமலை சென்று திரும்பிய சிறுவன் பலி!

கார் கவிழ்ந்து விபத்தானதில் சிறுவன் பலி; 4 பேர் காயம்

Updated On : 22 நவம்பர், 2024 at 9:46 AM
கோப்புப் படம்
பகிர்:

சபரிமலைக்கு சென்று திரும்பிய சிறுவன் கார் கவிழ்ந்து விபத்தில் பலியானார்.

சேலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனான சித்தார்த் உள்பட 5 பேர் கொண்ட குடும்பத்தினர் சபரிமலைக்கு சென்றுவிட்டு, தேனி மாவட்டம் வழியாக காரில் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், தேனியிலுள்ள கம்பம் பகுதிக்கு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது குடும்பத்தினர் 4 பேரும் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடப்பதாக காவல் கண்காணிப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →