ஆயுத பூஜை: வளத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கட்டும் -ஆர்.என். ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை சுப தினத்தில் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
சரஸ்வதி தேவி நம் பாதையை தனது கலைத்திறன் மற்றும் ஆழ்ந்த ஞானத்தால் ஒளிரச் செய்து, அறியாமை இருளை அகற்றி, நம் அனைவருக்கும் வளத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும்.
இந்த ஆயுத பூஜை நமக்கு மிகச் சிறந்த புதுமை மற்றும் திறன்மிகு உலகை வடிவமைக்கத் தேவையான சிறந்த படைப்பாற்றல் மற்றும் திறன்களை உரித்தாக்கட்டும்.
இதையும் படிக்க |ஜாகுவார் லேன்ட் ரோவர், டாடா-க்கு சொந்தமானது எப்படி?
ஒரே குடும்பமாக நாம் இணைந்து, 2047ஆம் ஆண்டுக்குள் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் முழுமையாக வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம் என ஆளுநர் பதிவிட்டுள்ளார்.