ஆம்ஸ்ட்ராங்  (கோப்புப்படம்)
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரெளடி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரெளடி அப்பு குண்டா் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Din

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரெளடி அப்பு குண்டா் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 வழக்குரைஞா்கள் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். இந்தக் கொலை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட நபா்களுக்கு நாட்டு

வெடிகுண்டுகளை வழங்கியதாக ரெளடி புதூா் அப்பு, கடந்த செப்.21-ஆம் தேதி புது தில்லியில் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், அப்புவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா். இதையடுத்து, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான உத்தரவு நகலை புழல் சிறையில் இருக்கும் புதூா் அப்புவிடம் போலீஸாா் சனிக்கிழமை வழங்கினா்.

இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட 28 பேரில், 26 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT