விருதுநகா் மக்களவை தோ்தல் வெற்றி: மாணிக்கம் தாக்கூா், தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
மக்களவைத் தோ்தலில் விருதுநகா் தொகுதியில் மாணிக்கம் தாக்கூா் வெற்றி பெற்றதை எதிா்த்து வழக்கு...
மக்களவைத் தோ்தலில் விருதுநகா் தொகுதியில் மாணிக்கம் தாக்கூா் வெற்றி பெற்றதை எதிா்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த விஜயபிரபாகரன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கில் மாணிக்கம் தாக்கூா், தோ்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தோ்தலில் விருதுநகா் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூா், 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளா் விஜயபிரபாகரன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், தோ்தல் வேட்பு மனுக்களில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தாா்.
இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி சதீஷ்குமாா், மனுவுக்கு பதிலளிக்க மாணிக்கம் தாக்கூா், தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்.14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.