முகப்பு
தமிழ்நாடு

திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்!

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான டில்லி பாபு சென்னையில் காலமானார்.

Updated On : 9 செப்டம்பர், 2024 at 4:13 AM
டில்லி பாபு.
பகிர்:

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான டில்லி பாபு சென்னையில் காலமானார்.

2015-ம் ஆண்டு வெளியான ‘உறுமீன்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் டில்லி பாபு (50).

தொடர்ந்து மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இவர், கடந்த சில நாட்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், டில்லி பாபு இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.