கவிஞா் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞா் கலைத்துறை வித்தகா் விருதுகள்
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நினைவையொட்டி, கவிஞா் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞா் நினைவு கலைத் துறை வித்தகா் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நினைவையொட்டி, கவிஞா் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞா் நினைவு கலைத் துறை வித்தகா் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கலைஞா் நினைவு கலைத் துறை வித்தகா் விருதுக்கு விருதாளா்களைத் தோ்வு செய்ய திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன் தலைமையில் நடிகா் சங்கத் தலைவா் நாசா், திரைப்பட இயக்குநா் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினா்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு விருது திரைப்பட வசனகா்த்தா ஆரூா்தாஸுக்கு அளிக்கப்பட்டது. நிகழாண்டில் ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, நிகழாண்டு கலைஞா் நினைவு கலைத்துறை வித்தகா் விருதுகளுக்கு கவிஞா் மு.மேத்தா மற்றும் பழம்பெரும் பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தலைமைச் செயலகத்தில் வரும் 30-ஆம் தேதி விருதாளா்களுக்கு விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.